Sri Krishna Electro Herbal Polyclinic

இனிய மருத்துவம் எலக்ட்ரோபதி

இறைவன் நமக்கு அளித்த அருட் கொடைகளில் மிகவும் சக்தி  படைத்தது. பஞ்ச பூதங்கள் மட்டும் தான் அண்டங்களில் இருப்பதை எல்லாம் பிண்டத்தில் காணலாம். பிண்டத்தில் இருப்பதை அறிந்தால் அண்டத்தில் இருப்பதை அடையலாம் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு 18ம் நூற்றாண்டில் கவுன்ட் சீசர் மேத்தியின் மூலம் இவ்வுலகில் வித்தாகியது எலேக்ட்ரோபதி என்ற மருத்துவ முறையாகும்.

இந்திய முறை மருத்துவத்தில் மட்டுமே பஞ்ச பூத ஆற்றல்கள் காணப்பெறும் பலனை, முற்றிலும் மாறுபட்ட முறையில் இயற்கையின் பஞ்ச பூத ஆற்றலில் வெளிப்படும் சக்தியை முதலில் பெரும் தாவர இனங்களில் பிரித்து ஆய்வு செய்து முறைப்படுத்தப்பட்டு விஞ்ஞான முறையில் நிருபிக்கப்பட்ட மருத்துவ முறையே ஏலேக்ட்ரோபதி மருத்துவமாகும்.

இவ் மருத்துவ முறையில் உயிரை வளர்க்கும் சக்தி நிரம்ப பெற்ற மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் ஆளுமையுடன் இறைவனால் படைக்கப் பெற்ற தாவரங்களில் (மூலிகைகள், பூ, மலர், காய், கனிகள்) இவை அனைத்தும் சக்தி பெற்றவையாகிறது. கணக்கில் அடங்காத தாவர மூலிகைகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட 114 மூலிகைகள் மட்டுமே ஏலேக்ட்ரோபதி மருத்துவ முறைக்கு பயன்படுத்த ஆய்வு முறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிலும் நஞ்சற்ற, விசமற்ற, மனிதனுக்கு எவ்வகையிலும் தீமை செய்யாத, தாவர மூலிகை செடியின் பகுதியில் இருந்து சேகரித்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதாவது இயற்கையிலேயே எல்லா உயிரினங்களுக்கும் முறையே தாவர மூலிகைகள், விலங்குகள், மனிதர்கள் வரை மின் அயனி என்ற மின் காந்த சக்தியில் உள்ள நேர் மின் ஆற்றல், எதிர்மின் ஆற்றல் என்ற பண்புகளை பெற்று உள்ளது.

மின் அயனி என்றால் என்ன?

மின் அயனியை – எலெக்ட்ரோ எனலாம். மனித உடலில் இயற்க்கையாகவே மின் சக்திஉள்ளதை நாம் அறிந்ததே. அதன் அடிப்படையில் உடலில் உள்ள பாகங்கள்நோயால் பாதிக்கும்போது, பாதிக்கப்பட நோய் உறுப்புகளுக்கு தேவையான மின் சக்தி போதிய அளவு கிடைக்கப்பெறததே காரணம் என்பதை அறிந்து அதற்கு சிகிச்சை தருகின்றோம். இக்கால கட்டத்தில் மின் சக்தி ஒருங்கே சேமிக்கப்பட்ட மின் காந்த சக்தியால், பாதிக்கப்பட நோய்க்கு ஏற்ப சிகிச்சை மேற்கொண்டு (மின் காந்த சக்தி மூலம்) குணப்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு மின் காந்த சக்தி ஒருங்கே பெற்ற மின் அயனி என்ற எலேக்ட்ரோவில் நேர் மின் அயனி – எதிர் மின் அயனி அதாவது நேரமின் ஆற்றல் (+ve), எதிர் மின் ஆற்றல்(-ve), ஆற்றலையே பெற்றதாலும் இவ் எலக்ட்ரோபதி மருத்துவ முறையே எளிதில் நோயை குணப்படுத்துவதில் முதல் நிலை பெற்றுள்ளது. இதே போல தாவர மூலிகைகள் அனைத்திலும் இவ் மின்  ஆற்றல் காணப்படுகிறது.

முக்கியமாக சூரியன் வணங்கி, சந்திரன் வணங்கி, தொட்டா சினுங்கி, தொழு கன்னி, அழு கன்னி சேந்தாடும் பாவை , நரி மிரட்டி, எருமை கண் விருட்சம், நிலம் புரண்டி, என பல மூலிகைகள் உள்ளன.

சூரியனிடமிருந்து வரும் 7 மின் ஆற்றல்களை அதிகமாக கிரகித்து, தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு, தமது தாவர மூலிகையில் தேவையுள்ள பகுதிக்கு கொண்டு சென்று சேர்த்து சேமித்து வைக்கிறது. இவ் மூலிகைகளை மட்டும் இனம் கொண்டு தேர்வு செய்து எலேக்ட்ரோபதி மருத்துவ முறையில் கையாளப்படுகிறது. உடலுக்கு தேவையான இவ் ஆற்றல் குறைபாடு ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் – நிணநீர் மற்றும் இரத்தத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதனை சம நிலை படுத்த எவ் ஆற்றல் தேவைபடுகிறதோ அதற்கு எதிரான மின் ஆற்றல் நிரம்பப்பெற்ற தாவர மூலிகை மருந்தினை பயன்படுத்தும் போது குணம் பெறுகிறது. குறிப்பாக உடலிலுள்ள அணைத்து உறுப்புகளுக்கும் ஒழுங்கான சீரான முறையில் இரத்தம், நிணநீருக்கு தேவையுள்ள சத்துகளை செலுத்தி (+Ve, -Ve Herbs) அதன் மூலம் உடலின் உறுப்புகளை ஒழுங்காக இயங்க செய்து உடலை பேணி காப்பது ஆகும்.

உடலில் எலெக்ட்ரோ அமைப்பு:

மனித உடலில் வெளிப்பக்கம் நேர்மின் துருவமாகவும் உடலில் உள்பக்கம் எதிர்மின் துருவ ஆற்றலாகவும் செயல்படுகிறது. இவ்வாறு இரண்டு துருவ அமைப்பும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவதே உடலில் இயக்கமாகும். இந்த தத்துவத்தை ஒட்டியதேயின், யாங் என்ற அக்குபஞ்சர் மற்றும் காந்த சிகிச்சையாகும். நேர்மின் ஆற்றல் குறைந்த இடத்தை எதிர்மின் ஆற்றல் மூலம் சரி செய்யலாம்.

இவ்வாறு தான் காந்த சிகிச்சையிலும் வெப்பமான உடல்பகுதியான வலப்புறத்தை குளிர்சிதன்மை உடைய NR  என்ற வடதுருவ மூலமாகவும் குளிர்ச்சியான பாகமான இடப்பக்கத்தை என்ற SL தென் துருவ வெப்பமான பகுதியாலும் உடலில் மீது வைத்து சரிபடுதப்படுகிறது. அதே போல் தன் எலேக்ட்ரோபதி மருத்துவ முறையில் சிகிச்சை கையாளப்படுகிறது

எலேக்ட்ரோபதி என்றால் என்ன?

பஞ்ச பூத ஆற்றல் பெற்று வளரும் இயற்கை தாவரமூலிகைகளில் இருந்து பின் விளைவு எவ்விதத்திலும் ஏற்படுத்தாமல் இருக்க பெறும் செடி, கொடி, மரம்,காய், கனி, வேர், பூ, பட்டை, இதழ் இவற்றினுள் உள்ள மின் ஆற்றல் (+Ve, -Ve) சக்தியை மிக அதிக அளவில் தன்னுள் பெற்றுள்ள தாவர மூலிகையை பயன்படுத்தி தயார் செய்த மருந்தினை கொண்டு சிகிச்சை அளிக்கும் அற்புத மருத்துவமே எலேக்ட்ரோபதி மருத்துவ முறையாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare